search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பஸ்-வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
    X

    பஸ்-வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

    • திருச்சி மணப்பாறை செவலுாரை சேர்ந்த அழகு சுசீந்திரன்(வயது 29) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
    • ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை

    மணப்பாறை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் கடந்த ஜன- 17 தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி மணப்பாறை பகுதியிலிருந்து 3 ஜல்லிக்கட்டு காளைகளுடன் 7 பேர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு முடிந்து அவர்கள் லோடு வேனில் காளைகளுடன் திரும்பி கொண்டிருந்தனர். வம்பன் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது அரசு பஸ், சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் பூலாங்குளத்தை சேர்ந்த டிரைவர் விக்கி (வயது 30), காளைகளை அழைத்து வந்த செவலூரை சேர்ந்த மதியழகன் (வயது 25), மணப்பாறையை சேர்ந்த தர்ம அழகு (வயது 30) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 3 ஜல்லிக்கட்டு காளைகளும் செத்தன. காயமடைந்த 12 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற வந்த திருச்சி மணப்பாறை செவலுாரை சேர்ந்த அழகு சுசீந்திரன்(வயது 29) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×