என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி டி.எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
- திருச்சி டி.எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்
- ஆபாச பட விவகாரத்தில் சிக்கியவர்
திருச்சி
திருச்சி சரக காவல்துறையினருக்கு என தனி வாட்ஸ் அப் குரூப் செயல்பட்டு வருகிறது. இதில் காவல்துறை தொடர்பான செய்திகள் படங்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தக் குழுவில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருடன்,
ஜீயபுரம் டி.எஸ்.பி. யாக பணியாற்றி வரும் பர வாசுதேவன் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டது. இதை கண்ட காவலர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அந்த குழுவில் இணைந்திருக்கும் பெண் காவலர்கள் பலரும் டிஜிபிக்கு புகார்களை அனுப்பினர். இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிந்து இது குறித்த விசாரணை அறிக்கையை டிஜிபிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் புகாருக்கு உள்ளான பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் டிஎஸ்பி பரவாசு தேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தர விட்டுள்ளார். டிஎஸ்பி பரவாசுதேவன் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் ஜீயபுரம் டிஎஸ்பிஆக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்