என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி
Byமாலை மலர்8 Jun 2023 6:58 AM GMT
- சோமரசம்பேட்டை அருகே கேபிள் டி.வி. ஆபரேட்டர் மீது மின்சாரம் பாய்ந்ததால் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி பாலக்கரை கான்யான் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 31). கேபிள் டிவி ஆபரேட்டர். இவர் தீரன் நகர் மயிலாடுபாறை பகுதியில் இளங்கோ என்பவரது வீட்டுக்கு கேபிள் இணைப்பு கொடுப்பதற்காக சென்றார். பின்னர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் கேபிள் டி.வி. இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.இதுகுறித்து அவரது தந்தை சுந்தர்ராஜன் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X