search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேக்கரியில் தீ விபத்து
    X

    பேக்கரியில் தீ விபத்து

    • தீயணைப்பு வீரர்கள் வந்து அணைத்தனர்
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

    திருச்சி,

    திருச்சி பாரதியார் சாலையில் ஆர்.சி. பள்ளி அருகாமையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரி முன்பு வாடிக்கையாளர்கள் அமர வசதியாக கீற்று கொட்டாய் அமைக்கப்பட்டது. இந்த கீற்று கொட்டாயில் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்து அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி தீயணைப்பு நிலையில் அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த கடை பெரிய வணிகவளாகத்தில் அமைந்துள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்த காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கீற்று கொட்டாய் தவிர வேறு எங்கும் தீ பரவவில்லை.விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. முதல் தளத்தில் நின்ற நபர்கள் யாரேனும் சிகரெட் குடித்துவிட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த தீ விபத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×