என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
இலவச மருத்துவ முகாம்
- நேரு யுவகேந்திரா இயக்குனர் தொடங்கி வைத்தார்
- மருத்துவ பரிசோதனைகளுடன் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது
திருச்சி.
திருச்சி எல்லக்குடி பள்ளியில் இலவச மருத்துவ முகாம் சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் இ.எம். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார். எல்லக்குடி கிராம தலைவர் வினோத் கனகராஜ், தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மத்திய அரசின் நேரு யுவகேந்திரா இயக்குனர் சுப்பிரமணியன் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் கனரா வங்கி மேலாளர் சுப்பிரமணியன், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாநில ஆலோசகர் ராஜசேகரன், மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மருத்துவ முகாமில் பல்வேறு நோய்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டு, இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. முடிவில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் கம்பரசம் பேட்டை தர்மராஜ் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்