search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனையில் இருந்து மாயமானவர் சாவு
    X

    அரசு மருத்துவமனையில் இருந்து மாயமானவர் சாவு

    • முள்காட்டில் பிணமாக மீட்பு
    • கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எப்.கீழையூரை சேர்ந்த–வர் ராஜகோபால் (வயது 65). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த 24-ந்தேதி மணப் பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்பத்தினர் சிகிச் சைக்காக சேர்த்தனர்.ஆனால் அவர் அங்கிருந்து திடீரென்று மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி சீத்தாலெட்சுமி அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று காலை அன்புமேடு பகுதியில் உள்ள முள்காட்டில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மணப்பாறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்தனர். அப்போது மாயமான ராஜகோபால் என்பவர் தான் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் சில இடங்களில் காயங்களும் இருந்தது. இதையடுத்து மணப்பாறை போலீசார் இறந்தவரின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்தவரின் உடலில் சில காயங்கள் இருந்ததோடு வாய் மற்றும் மூக்கில் ரத்தம் அதிகம் வெளியாகி இருந்தது. எனவே அவர் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்து–வமனையில் மாயமானவர் முள் காட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது

    Next Story
    ×