search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் பயணி கொண்டு வந்த பால் டப்பாவில்  ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
    X

    திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் பயணி கொண்டு வந்த பால் டப்பாவில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

    • திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் பயணி கொண்டு வந்த பால் டப்பாவில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
    • 147 கிராம் எடை கொண்ட தங்கம்

    திருச்சி:திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி, பஹரின், சார்ஜா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வழியாக அதிக அளவில் பயணிகள் வந்து செல்வது வாடிக்கையாகும். அந்த வகையில் வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமான மூலம் திருச்சி வந்த விமானப் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியை சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பால் பவுடர் டப்பாவில் பிஸ்கட் வடிவிலான 2 தங்க கட்டிகள் இருந்தது. 147 கிராம் எடை கொண்ட அந்த தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×