என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
லால்குடி அருகே சம்பவம்-விளையாட்டு மைதான சீரமைப்பின் போது மின்சாரம் தாக்கி 8 கல்லூரி மாணவர்கள் காயம்
- லால்குடி அருகே சம்பவம்-விளையாட்டு மைதான சீரமைப்பின் போது மின்சாரம் தாக்கி 8 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர்
- இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் அரசு வேளாண்மைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் விளையாட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதைத்தொடர்ந்து விளையாட்டு மைதானத்தை புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவர்கள் இன்று வாலிபால் விளையாட்டிற்கான உபகரணங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வாலிபால் கம்பத்தின் மேலே செல்லும் செல்லும் உயர் மின்னழுத்த வயரில் உரசியது.
இதில் மாணவர்கள் மதன்குமார், முகமது யூசுப், செந்தமிழ், லோகேஷ், பரசுராமன், மகேந்திரன், திவாகர், புகழேந்தி ஆகிய 8 பேரு மீதும் மின்சாரம் பாய்ந்தது.உடனே கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களை மீட்டுலால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எட்டு பேரும் நலமுடன் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்