search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காய்ச்சல் தடுப்பு முகாம்
    X

    காய்ச்சல் தடுப்பு முகாம்

    • காய்ச்சல் தடுப்பு முகாம்
    • மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டது

    திருச்சி,

    தமிழகத்தில் தற்போது வைரஸ் காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருகிறது. இதனை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், உரிய பரிசோதனைகள் மேற் கொள்ளவும் வலியுறுத்தி உள்ளார்.மேலும் கொரோனா தாக்கமும் தொடங்கி இருப் பதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருச்சி மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் திருச்சி உறையூர் பகுதியில் பொது மருத்துவ மற்றும் காய்ச்சல் நோய் தடுப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.உறையூர் குறத்தெரு பகுதியில் மாநகராட்சி சார்பாக நடந்த இந்த முகாமினை மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.காந்திபுரம் சுகாதார நிலைய மருத்துவர் விமலா மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இணை நோய்களுடன் வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

    Next Story
    ×