search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உப்பிலியபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம் -வாடிவாசலிலிருந்து சீறி வந்த காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் கடும் போட்டி
    X

    உப்பிலியபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம் -வாடிவாசலிலிருந்து சீறி வந்த காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் கடும் போட்டி

    • உப்பிலியபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலிலிருந்து சீறி வந்த காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் கடும் போட்டி போட்டனர்
    • காயமடைந்த வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டத்தில் பெரியசூரியூரில் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கிய ஜல்லிக்கட்டின் நீட்சியாக மணப்பாறை, நவல்பட்டு, அளுந்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங் களில் அடுத்தடுத்து தமிழர் களின் பாரம்பரிய விளை–யாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று உப்பிலியபுரத்தை அடுத் துள்ள டி.மங்கப்பட்டிபுதூ–ரில் இன்று 65-வது ஜல்லிக்கட்டு விழா கோலா–கலமாக நடைபெற்று வரு–கிறது. இதில் பங்கேற்ப–தற் காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபி–டித்து 650 காளைகளுக்கும், 200 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.திருச்சி மட்டுமின்றி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து காளை–கள் கொண்டு வரப்பட்டு போட்டியில் கலந்து–கொண் டன. இதில் முதலில் கோவில் காளை அவிழ்ந்து விடப்பட்டது. பின்னர் பதிவு செய்யப்பட்ட காளை–கள் ஒன்றன்பின் ஒன்றாக களமிறங்கின.நன்கு பயிற்சி பெற்ற காளைகள் களத்தில் நின்று விைளயாடி பார்வையா–ளர்களை வெகுவாக கவர்ந் தன. அதேபோல் போக்கு காட்டிய காளைகளின் திமில்களை பிடித்து அடக் கிய மாடுபிடி வீரர் களை ரசிகர்கள் கைதட்டி பாராட்டி ஆராவா–ரம் செய்தனர். இதில் சிறந்த காளைகள் மற்றும் காளை–யர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள் ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதையொட்டி முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஷ்மின், துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தொட்டியம் இன்ஸ்பெக்டர், முத்தையன், முசிறி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், முசிறி அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் காவேரி, உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் 120 போலீசார் பாதுகாப்பு பணியினில் ஈடுபட்டனர்.அதேபோல் காயமடைந்த வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


    Next Story
    ×