search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூரில் பயணியிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை -மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
    X

    துறையூரில் பயணியிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை -மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

    • பேருந்தில் ஏறிய பின்னர், தான் கொண்டு வந்த பையை பார்த்துள்ளார்.
    • பையின் ஜிப் பகுதி திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள கந்தசாமிபுதூர் கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக நேற்று துறையூர் பேருந்து நிலையம் வந்தார்.

    அதன் பிறகு சேலம் செல்லும் பேருந்தில் ஏறிய பின்னர், தான் கொண்டு வந்த பையை பார்த்துள்ளார். அப்பொழுது பையின் ஜிப் பகுதி திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பையை திறந்து பார்த்த பொழுது, பைக்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுன் எடையுள்ள செயின், தோடு உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சம்பவம் தொடர்பாக பார்த்திபன் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் பட்டப் பகலில் பேருந்து நிலையத்திலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×