search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விபத்தில் பால் வியாபாரி சாவு
    X

    விபத்தில் பால் வியாபாரி சாவு

    • விபத்தில் பால் வியாபாரி பலியானார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள குமாரவயலூர், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது65). பால்வியாபாரியான இவர், இருசக்கர வாகனத்தில் சென்று பால் விநியோகிப்பது வழக்கம். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் பால் கொண்டு சென்றார். வயலூர் அருகே பிரதான சாலையில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





    Next Story
    ×