search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவலூர்குட்டபட்டு கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்
    X

    நவலூர்குட்டபட்டு கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்

    • நவலூர்குட்டபட்டு கிராமத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்
    • ஜல்லிக்கட்டு விழாவிற்காக சுமார் 700 காளைகளுக்கும், 450 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.

    ராம்ஜிநகர்:

    திருச்சி அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு கிரா–மத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பாக வருடம் தோறும் ஜல்லிக் கட்டு போட்டி நடைபெறு–வது வழக்கம். அதேபோன்று இந்த வருடமும் நாளை (19-ந்தேதி, வியா–ழக்கிழமை) கிராம பொது–மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்து–வதற்காக அரசு அனுமதி கோரப்பட்டு இருந்தது.

    அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நாளை நக–ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் ஆகியோர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைக்கிறார். இதில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் பழனியாண்டி, மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, தொழிலதிபர்கள் அருண் நேரு, ஜோசப் லூயிஸ், தி.மு.க. மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத் தூர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.

    இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்காக சுமார் 700 காளைகளுக்கும், 450 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வாடிவாசல் அமைப்பது, பார்வையாளர்கள் கேலரி, பாதுகாப்புக்கான வலை அமைப்பது மற்றும் தேங்காய் நார் பரப்புவது போன்ற பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம பட்டையாதாரர்கள், மணி–யக்காரர்கள், ஊர் பொது–மக்கள் மற்றும் விழாக்குழு–வினர் செய்து வரு–கின்றனர்.


    Next Story
    ×