என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபரை கொன்று பாலத்தின் கீழ் வீசிச்சென்ற மர்ம நபர்கள்
- வாலிபரை கொன்று பாலத்தின் கீழ் மர்ம நபர்கள் வீசிச்சென்றனர்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொத்தம்பட்டி பாலத்தின் அடியில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்றனர்.அப்போது அங்கு தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ஆழமான அரிவாள் வெட்டு காயங்களுடன், முகம் சிதைந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
பாலத்தின் மேல் பகுதியில் ரத்தம் உறைந்த நிலையில் கிடந்தது. எனவே அவரை வேறு எங்கேயோ கொலை செய்து, அதனை மறைக்கும் நோக்கில் பாலத்தின் மேற்பகுதியில் இருந்து அடியில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கொலையுண்ட நபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சம்பவ இடத்திற்கு திருச்சியில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துறையூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்