search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் சுருண்டு விழுந்து சாவு
    X

    முதியவர் சுருண்டு விழுந்து சாவு

    • முதியவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
    • வெயில் கொடுமையால் சம்பவம்

    திருச்சி,

    திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகரன் ரவி டேவிட் (வயது 72). இவர் அந்த பகுதியில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஜெயசேகரன் ரவி டேவிட் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வெயிலின் கொடுமை தாங்காமல் அவர் சுருண்டு விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி ஜெயசீலி எப்சி பானு கே.கே. நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×