என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மண்ணச்சநல்லூரில் நந்தவனத்தை மீட்க கோரி கலெக்டரிடம் மனு
- மண்ணச்சநல்லூரில் நந்தவனத்தை மீட்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்
- ஊர் பொதுமக்கள் நந்தவனத்தை பார்வையிடவதற்கும் அனுமதி இல்லை என்று துரத்தப்படுகிறார்கள்
மண்ணச்சநல்லூர்:
108 திவ்ய தேசங்களில் ஒன்றான முக்கியத்துவம் வாய்ந்த திருவள்ளறை புண்டரீகாச பெருமாள் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பேர் வந்து செல்கிறார்கள். சமீபத்தில் கோவிலுக்கு சொந்தமாக நந்தவனம் அமைக்கப்பட்டது. இந்த நந்தவனத்தை நகராட்சி மற்றும் நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அந்த நந்தவனத்திற்கு உபயதாரர் என்ற பெயரில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வேலுமணி ஜெயபால் என்பவர் அந்த இடத்தை தன் வசப்படுத்திக் கொண்டு விளம்பரம் பலகை யாருடைய அனுமதியும் இல்லாமல் வைத்து, ஊராட்சியில் அனுமதி இல்லாமலும், மனை ரசீது இல்லாமலும் தனது பண பலத்தை பயன்படுத்தி மின் இணைப்பு கல்பனா ஜெயபால் என்ற பெயரில் இணைப்பு பெற்றுள்ளார்.
மேலும் நந்தவனத்திற்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். ஊர் பொதுமக்கள் நந்தவனத்தை பார்வையிடவதற்கும் அனுமதி இல்லை என்று துரத்தப்படுகிறார்கள். மின் இணைப்பு வழங்கியதில் அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மின் இணைப்பை ரத்து செய்யக்கோரியும் நந்தவனத்தை மீட்க கோரியும் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பஞ்சாயத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்