search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சியில் பரபரப்பு: போதை ஊசி, மாத்திரைகளுடன் வாலிபர் கைது
    X

    திருச்சியில் பரபரப்பு: போதை ஊசி, மாத்திரைகளுடன் வாலிபர் கைது

    • போதை ஊசி, மாத்திரைகளுடன் வாலிபர் கைது செய்யபட்டார்
    • அரியமங்கலம் வியாபாரியை பிடிக்க போலீஸ் தீவிரம்

    திருச்சி:

    திருச்சி மாநகரில் போதை ஊசி, மாத்திரைகள் விற்பனை அமோகமாக உள்ளது. இதில் குறிப்பாக அரியமங்கலம் பகுதியில் போதை ஊசி, மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுகிறது. அங்கிருந்து வாங்கி வந்து மாநகரில் பல இடங்களில் வைத்து இளைஞர்கள் ஊசி மற்றும் மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருச்சி பழைய குட்ஷெட் ரோடு ெரயில்வே மைதானம் பகுதியில் போதை ஊசி, மாத்திரை விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போதை ஊசி மாத்திரைகளுடன் இருந்த சதாம் உசேன் என்ற வாலிபரை கைது செய்தனர்.விசாரணையில் அரியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரியிடம் வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து போதை ஊசி மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இளைஞர்களுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரைகள் சப்ளை செய்த அரியமங்கலம் வியாபாரியை பிடிக்க கோட்டை போலீசார் விரைந்துள்ளனர்.

    Next Story
    ×