search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடங்களுடன் சாலை மறியல்
    X

    காலி குடங்களுடன் சாலை மறியல்

    • குடிநீர் வராததை கண்டித்து ராம்பாளையம் பகுதியில மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு, போலீசார் பேச்சு வார்த்தை

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி உட்பட்ட இராம்பாளையம் மேலுர் பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி பலமுறை புகார் மனு கொடுத்துள்ளனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் திடீர் இன்று காலை மண்ணச்சநல்லூர்- எதுமலை செல்லும் சாலையில் ராசாம்பாளையம் மேலுர் பஸ் ஸ்டாப் பகுதியில் பெண்கள் கை குழந்தையுடனும், காலிக் குடங்களுடனும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் போனில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.ஆனால் சமாதானம் ஆகாத பொதுமக்கள் மக்கள் உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் இங்கு வர வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்றனர்.குடிநீர் இணைப்பு அனைத்தும் சாலை ஓரத்தில் போடப்பட்டதால் தண்ணீர் பிடிக்க செல்லும் பொழுது விபத்து ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×