என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
துக்க வீட்டில் ஆறரை பவுன் நகை திருட்டு
மண்ணச்சநல்லூர்,
திருச்சி மாவட்டம் லால்குடி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி ஷாலினி (வயது 23). இவரது மாமியார் ஜெயலட்சுமி லால்குடி அருகே உள்ள நெய் குப்பை பகுதியில் தனியாக வசித்து வந்தார். சமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த சூரியகலா ( 53) என்பவர் கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி சூரியகலா, ஷாலினியை தொடர்பு கொண்டு உங்களது மாமியாரின் உடல்நிலை மோசமாகிவிட்டது என தெரிவித்தார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் ஜெயலட்சுமி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.
பின்னர் ஷாலினி மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று அவருக்கு இறுதி காரியங்களை செய்தனர்.
பின்னர் ஜெயலட்சுமி அணிந்திருந்த ஆறரை பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.
தற்போது ஷாலினி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மாமியாரின் நகைகளை சூரிய கலா திருடி இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். துக்க வீட்டில் நகை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்