search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நடமாடும் வாகனத்தில் சிறுதானிய உணவுகள்
    X

    நடமாடும் வாகனத்தில் சிறுதானிய உணவுகள்

    • அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
    • இயற்கை குடில் சார்பில் ஆரோக்கிய உணவு

    திருச்சி,

    இயற்கை வேளாண்மை விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் ரசாயனம் இல்லாத உணவு தானியங்களை வாங்க விரும்பும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக 'இயற்கை குடில்' நிறுவனத்தின் துவக்க விழா திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்றது.அமைச்சர் கே.என். நேரு விழாவினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,இயற்கை வேளாண்மையில் விளைந்த பச்சை காய்கறிகள் பழங்களை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இயற்கை குடில் நிறுவனம் மூலம் இருக்கும் இடத்தில் நீங்கள் ஆரோக்கிய உணவுகளை பெற முடியும்' என்றார். முன்னதாக நுகர்வோரின் இருப்பிடத்திற்க்கே சென்று பொருட்களை வழங்கும் நடமாடும் சிறுதானிய உணவு வாகனத்தையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவர் சுகுமார், தஞ்சை வேளாண் செம்மல் கோ.சித்தர், என் ஆர் அகாடமி மேலாண் இயக்குனர் விஜயாலயன், வேளாண் வணிக துறை துணை இயக்குனர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.நிகழ்ச்சி ஏற்பாட்டினை இயற்கை குடில் இயக்குனர்கள் முன்னின்று சிறப்பாக செய்து இருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குனர் கலைமகள் ராஜேந்திரன் நன்றியுரை வழங்கினார்.

    Next Story
    ×