search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டுக்குள் ஒருவர் மர்மச்சாவு
    X

    பூட்டிய வீட்டுக்குள் ஒருவர் மர்மச்சாவு

    • மண்ணச்சநல்லூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை கொலையா? தற்கொலையா ? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    மண்ணச்ச நல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 78). இவர் தனியாக வசித்து வந்தார். இவரின் உறவினர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுவாமிநாதன் ( 39). இவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போனில் நலம் விசாரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் வழக்கம் போல், கடந்த 19-ந்தேதி அன்று, சுவாமிநாதன் ராஜகோபாலை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. இந்நிலையில், ராஜகோபால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்தது.இதையடுத்து சுவாமிநாதன் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ராஜகோபால் தனது பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பிணமாமக கிடந்த ராஜகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராஜகோபால் எப்படி இறந்தார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×