என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
புங்கனூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா
- புங்கனூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா நடைபெற்றது
- கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது
ராம்ஜிநகர்:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புங்கனூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கம் தொகுதி சட்ட–மன்ற உறுப்பினர் எம.பழனி–யாண்டி கலந்து கொண்டார்
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி (பொறுப்பு), ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகர், மணிகண்டம் ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் மற்றும் பல் வேறு துறையை சார்ந்த அரசு அதிகாரிகள், பொது–மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் வருவாய்த்துறை சார்பில் 261 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு பண்ணை கருவிகள் மற்றும் விதைத்தெளிப்பான், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறு–பான்மை நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் பாதுகாப்புத் துறை சார்பில் 2 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள பவர் டில்லர் ஒன்று 60 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவம் மற்றும் நல் வாழ்வுத்துறை ஒருங்கி–ணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் துறை, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கால்நடை பாதுகாப்பு துறை ஆகிய துறைகளின் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு அந்தந்த துறையின் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத் தப்பட்டன.
மேலும் அரசின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் துறை–யில் உள்ள சிறப்பு திட்டங் கள் மற்றும் மானியம் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்