search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கள்ளதொடர்பு விவகாரத்தில் வீட்டின் மீது கல்வீச்சு
    X

    கள்ளதொடர்பு விவகாரத்தில் வீட்டின் மீது கல்வீச்சு

    • லாரி டிரைவரின் வீட்டில் கல் வீசிய பெண்ணின் உறவினர்கள்
    • 4 பேர் மீது வழக்கு பதிவு

    திருச்சி,

    திருச்சியை அடுத்த ராம்ஜி நகர் அருகேயுள்ள கே.கள்ளிக்குடி காந்தி காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி வள்ளியம்மாள் என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ராஜாவுக்கும் செம்பட்டு திருவளர்ச்சி பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் (40) என்பவரின் உறவு பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.இந்த தகவல் அறிந்து சேகர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சேகர் தனது உறவினர்கள் சண்முகம் (50), அவரது மனைவி விஜயலட்சுமி (47), சடையன் (57) ஆகியோருடன் ராஜாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் அவரது மனைவி வள்ளியம்மாள் இருந்துள்ளார்.அவரிடம் ராஜா, உனது கணவர் எனது உறவு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார். இதனை அவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் உன்னையும் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என மிரட்டியோடு, வீட்டின் மீது சரமாரியாக கற்களையும் வீசி தாக்கியதாக கூறப்பட்டது.இதில் ராஜாவின் வீட்டு மேற்கூரை ஓடுகள் உடைந்து நொறுங்கின. இதுகுறித்து வள்ளியம்மாள் ராம்ஜி நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சேகர் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×