என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சாலை விபத்தில் ஆசிரியர் பலி
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழப்பு
- மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் தனியார் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரி ஆசிரியர் உயிரிழந்தார்.மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் வசித்து வந்தவர் ஆரோக்கியம் மகன் சேசுசகாயராஜ் (வயது 54). இவர். நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மரவனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் சேசுசகாயராஜ் படுகாயம் அடைந்தார்.பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்