search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நீச்சல் குளத்தில்  ஆசிரியர் மாரடைப்பால் மரணம்
    X

    நீச்சல் குளத்தில் ஆசிரியர் மாரடைப்பால் மரணம்

    • மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சாவு
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை

    ராம்ஜிநகர்.

    ராம்ஜி நகர் அருகே உள்ள கள்ளிக்குடியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் (26) என்பவர் இசைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார் இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார் மேலும் இது குறித்து ராம்ஜி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×