search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விபத்தில் வாலிபர் சாவு
    X

    விபத்தில் வாலிபர் சாவு

    • டிப்பர் லாரி எதிர்ப்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது
    • சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக இறந்தார்

    திருச்சி :

    திருச்சி திருவாசி அருகே உள்ள மான்பிடி மங்கலம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பிரசன்னா (வயது 27) தங்கை மோனிகா (25). இரண்டு பேரும் வேலை விஷயமாக இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு திருச்சி ஓயாமரி சுடுகாட்டு சாலையில் வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அவர்களின் பின்புறம் வந்த டிப்பர் லாரி எதிர்ப்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் பிரசன்னா தலையில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக இறந்தார். மோனிகா லேசான காயத்துடன் உயிர்த்தபினார். இந்த விபத்து சம்பவம் குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி, டிரைவரை தேடி வருகின்றனர்.


    Next Story
    ×