search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் திருவிழா
    X

    பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் திருவிழா

    • பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்துவந்து வழிபாடு

    திருச்சி:

    திருச்சி மாநகர், விமானநிலையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் கோவிலின் 40-ம் ஆண்டு திருவிழா கடந்த 24-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து அம்பாள் அக்னிகரகத்துடன் வலம் வருதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து இன்றையதினம் அம்பாள் சக்தி கரகத்துடன் பால்குடம் எடுத்துவரும் வைபவம் நடைபெற்றது.

    திருச்சி கொட்டப்பட்டு கருப்பண்ணசுவாமி கோவிலில் இருந்து 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், காவடியுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து அங்காள ஈஸ்வரிக்கு பால்அபிஷேகம் செய்து பக்திபரவசத்துடன் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

    Next Story
    ×