search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    4 - வது மாடி  கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி
    X

    4 - வது மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி

    • 4 - வது மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்தார்
    • ஸ்ரீரங்கத்தில் பரிதாபம்

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு மாம்பழச்சாலை பகுதியில் உள்ள இடத்தில் 4 மாடி கட்டிடப்பணி நடந்து வருகிறது. இதில் தொழிலாளர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் 4வது மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சம்பத் (வயது 48)என்ற கொத்தனார் திடீரென்று தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×