search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிபன் கடை உரிமையாளர் சாவு
    X

    டிபன் கடை உரிமையாளர் சாவு

    • கடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி,

    தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ( வயது 42). இவருக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர் பீமநகர் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடைக்கு சென்ற அவர் கடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி பாத்திமா கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×