search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பரிதாபம்-நீர் நிலைகளில் மூழ்கி சிறுவன் உட்பட 2 பேர் பலி
    X

    திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பரிதாபம்-நீர் நிலைகளில் மூழ்கி சிறுவன் உட்பட 2 பேர் பலி

    • நீர் நிலைகளில் மூழ்கி சிறுவன் உட்பட 2 பேர் பலியானர்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த கொணலை ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் சூர்யா (வயது 11). இந்த சிறுவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை நாளாக இருந்த காரணத்தால் சூர்யா அருகாமையில் உள்ள சிறுவர்களுடன் கபடி விளையாட சென்றான்.பின்னர் அந்த சிறுவர்கள் அங்குள்ள கொணலை வாய்க்காலில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சூர்யா ஆழமான பகுதிக்கு சென்றான்.

    அடுத்த நொடி வெள்ளம் அவனை அடித்துச் சென்றது. இதைக்கண்டு பதறிப்போன மற்ற சிறுவர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே சற்று நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய சூர்யா பரிதாபமாக இறந்துள்ளான்.இதுகுறித்து அவனது தந்தை வீரமணி சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று முக்கொம்பு காவிரி ஆற்றப்படுகையில் குளிக்கச் சென்ற திருச்சி எலமனூர் பாரதிதாசன் தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி ரம்யா (33) வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்த இருவருக்கும் நீச்சல் தெரியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×