search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சுகந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
    X

    சுகந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

    • திருச்சி விமான நிலையத்தின் உள் பகுதியான செக்கின் பகுதியில் பயணிகள் இந்திய கொடியுடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு புகைப்படம் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • திருச்சி விமான நிலையத்தில் ஒரு வார காலத்திற்கு விதவிதமான ரங்கோலிகள் வரைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி :

    மத்திய அரசின் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை 75 நாட்கள் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்தை போற்றும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியினைஏற்ற வேண்டும் என பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு விதமான சுகந்திரதினவிழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை பறைசாற்றும் வகையில் விமான நிலையத்தின் உள் பகுதியான செக்கின் பகுதியில் பயணிகள் இந்திய கொடியுடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு புகைப்படம் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு விதவிதமான ரங்கோலிகள் வரைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இதன் முக்கிய பங்காக பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றடுக்கு பாதுகாப்பானது இன்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது இந்த நிலையில் விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின்பு விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப் படுகிறது.

    மேலும் விமானத்தில் பயணம் செய்ய தேங்காய், எண்ணெய் வகைகள், மிளகாய் தூள், மிளகாய் உள்ளிட்ட ஏழு வகையான பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது தொடரும் எனவும் விமான நிலைய ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விமான நிலைய வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மோப்பநாய் குழுவினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×