search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு இந்து மகா சபை எதிர்ப்பு
    X

    டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு இந்து மகா சபை எதிர்ப்பு

    • டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு இந்து மகா சபை எதிர்ப்பு தெரிவித்தனர்
    • திருச்சி கலெக்டரிடம் புகார் மனு

    திருச்சி:

    அகில பாரத இந்து மகா சபா தேசிய தலைவர் வி.எஸ்.ஆர்.ஆனந்த் தலைமையில் பா.ஜ.க. பிரமுகர் எஸ்.டி.–அசோக்குமார், இந்து மகா சபா நிர்வாகி மதுபாலன், திருச்சி குட்ஷெட் லாரி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சங்கர், அகில பாரத அனுமன் சேனா மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் கங்கா–தரன், அகில பாரத இந்து மகா சபா மாவட்ட தலைவர் மகேஷ் ஆகியோர் கலெக்டர் மா.பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப–தாவது:- திருச்சி டி.வி.எஸ். டோல் கேட் அருகில் சென்னை, தஞ்சை நெடுஞ்சாலைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வந்தது. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த கடை சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் அந்த டாஸ்மாக் மதுபான கடையை திறக்க முயற்சித்த போது அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அப்போது மதுபான கடை திறக்கும் முடிவை டாஸ்மாக் அதிகா–ரிகள் கைவிட்டனர். இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் அந்த மதுபான கடை அதே பகுதியில் திறக்கப்பட்டது. இது சர்வீஸ் சாலையில் அமைந்துள்ளது. மதுபான கடைக்கு சென்று மது வாங்கிக் கொண்டு அந்த ஒரு வழிப்பாதையில் தான் திரும்பி வரவேண்டும். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இங்கு கல்லூரி, தேவா–லயம் ஆகியவையும் அமைந் துள்ளன. இந்த மதுபான கடை மாணவ, மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆகையால் இந்த டாஸ்மாக் மதுபான கடையை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×