search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாறை அருகே களை கட்டும் ஜல்லிக்கட்டு போட்டி
    X

    மணப்பாறை அருகே களை கட்டும் ஜல்லிக்கட்டு போட்டி

    • மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது
    • 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெரிய அணைக்கரைப்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், மணப்பாறை போலீஸ் துணை சுப்பிரண்ட் ராமநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். சிறப்பு திருப்பலி நிறைவேற்றிய பின் வாடிவாசலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது.

    சுட்டெரிக்கும் வெயிலில் காளையர்களை காளைகள் விரட்டி அடிக்க, காளைகளை வீரர்கள் விடாமல் பிடிக்க என போட்டியில் களமே அதிர ஆர்வத்தில் பார்வையாளர்கள் உற்சாகமடைந்ததனர். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், – வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. போட்டியில் 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    போட்டியில் காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ராமநாதன்(மணப்பாறை), ஜாஸ்மீன் (முசிறி) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×