search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளி பிணம்
    X

    தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளி பிணம்

    • மதுவுக்கு அடிமையானவர் இருதினங்களுக்கு முன்பு மாயமானார்
    • தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

    திருச்சி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை மங்களாக்குடி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் வயது 48. இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியை பிரிந்து திருச்சி சந்து காசியா பிள்ளை கள்ளர் தெரு பகுதியில் லட்சுமணன் தனியாக வசித்து வந்தார்.

    இதற்கிடையே மதுவுக்கும் அடிமையானார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து கிடைக்கும் வருவாயில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமணன் இரு தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தொட்டிக்குள் அவர் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×