search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
    X

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

    • 173 மையங்களில் 37,534 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்
    • காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

    திருச்சி,

    எஸ்.எஸ்.எல்.சி. எனப் படும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 173 மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 6 மையங்களில் 1,600 தனித்தேர்வர்கள் தேர்வை எழுதினர். அதேபோல் திருச்சி மத்திய சிறை கைதிகள் 40 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினார்கள்.இந்த தேர்வுகள் வரு–கிற 20-ந்தேதி வரை நடை–பெறுகிறது. இன்று தமிழ் தேர்வை எழுதுவதில் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு மையங்களுக்கு வந் திருந்தனர்.முன்னதாக காலையிலேயே பெற்றோர்களிடமும், பெரியோர்களிடமும் காலில் விழுந்து ஆசி வாங் கிய மாண–வர்கள் வரும் வழியில் உள்ள கோவிலிலும் தரிசனம் செய்துவிட்டு வந்தனர். அதேபோல் தேர்வு மையங்களில் கடைசி நேரத்தில் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து தேர்வை எதிர்கொள்வது குறித்து ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை பகிர்ந்துகொண் டனர்.மேலும் வகுப்பு ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் தைரியம் கூறி தேர்வு மையங்களுக்குள் அனுப்பி வைத்தனர். இந்த தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 350 நிலையான குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு இருந் தனர். அவர்கள் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட் டார்கள். அத்துடன் 20 பேருக்கு ஒரு தேர்வுக்கூட கண்காணிப்பாளர் பணியில் இருந்தார். திருச்சி மாவட்டத்தில் வினாத்தாள் கட்டுக்காப்பகத்துக்கு 9 இடங்கள் அமைக் கப்பட்டிருந்தன. இந்த காப்பகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் வழித்தட அலுவலர்களாக 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு தொடங் கிய தமிழ் தேர்வை மாணவ, மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்.அதேபோல் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி தேர்வு எழுத சிறப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர்கள் சொல் வதை எழுதுவதற்காக 400 பேர் பணியில் இருந் தனர். இந்த தேர்வு மிகவும் எளிதாக இருந்தாக அவர் கள் மகிழ்ச்சியுடன் தெரி–வித்தனர்.

    Next Story
    ×