search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தாய் அடித்ததில் சிறுமி சாவு
    X

    தாய் அடித்ததில் சிறுமி சாவு

    • தாய் அடித்ததில் சிறுமி உயிரிழந்தார்
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது36). இவரது மனைவி பானுப்பிரியா. இவர்களுக்கு கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமணம் முடிந்து ஓவியா (வயது10) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பானுப்பிரியாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 6- ந் தேதி இரவு பானுப்பிரியா தன்னுடைய மகள் ஓவியாவை கையால் அடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சரவணக்குமார் மகளை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த நிலையில் ஓவியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணகுமார் பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×