என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன் மனைவி பலி
- நாகராஜா கண்டிகை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது
- பலியான அமுதாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கபிலன் (வயது38). இவரது மனைவி அமுதா (29). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கபிலன் தனது மனைவி அமுதாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது நாகராஜா கண்டிகை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா உடல் நசுங்கி கணவர் கண்முன் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் கபிலன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான அமுதாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்