search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
    X

    தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

    • கூலி பணத்தை பிரிப்பதில் தகராறு
    • குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார்

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் (வயது .28) தருமன் (வயது.27) சங்கர் (வயது .29) மூவரும் நேற்று மாரண்டஅள்ளி சந்தைவீதியை சேர்ந்த ராஜன் என்பவரிடம் வேலைக்கு சென்றனர். வேலை முடிந்ததும் மொத்த கூலி பணத்தையும் மாரியப்பன் வாங்கி கொண்டு மற்ற இருவருக்கும் கூலியை பிரித்து தராமல் குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார். நேற்று மாலை தருமன் ,சங்கர் இருவரும் மாரியப்பனிடம் வேலை செய்தகூலி பணத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர்.

    ஆனால் மாரியப்பன் பணத்தை தராததால் ஆத்திரமடைந்த இருவரும் மாரியப்பணை சராமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை அவரது மனைவி தேவி பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தருமன் ,சங்கர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×