search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருடிய இருவர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் திருடிய இருவர் கைது

    • அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • அரியலூரை சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 28 ).

    சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.

    சில மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து கார்த்திகேயன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அரியலூர் கீழத் தெருவை சேர்ந்த ராஜேஷ்குமார் ( 28), அரியலூர் வடக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் (40) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×