என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மாணவி உட்பட 2 பெண்கள் மாயம்
- மாணவிகளிடம் விசாரித்தும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
- செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பொது குறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அரூர் அரசு கல்லூரியில் முதலமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 23ந்தேதி அன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் கல்லூரி முடிந்து மாலை வீடு திரும்பவில்லை.
அவரை உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளிலும் தேடியும் அவர் எங்கே போனார் என்று தகவலும் கிடைக்கவில்லை. அவருடன் படிக்கும் மாணவிகளிடம் விசா ரித்தும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவி மாயமாகியிருந்தார்.
இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
அதே போன்று தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள குட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மர வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (வயது29) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ந்தேதி சுரேஷ் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்த பார்த்த போது சந்தியாவை காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது,
அவரை உறவினர்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் தேடியும் அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை. இது குறித்து சந்தியாவின் தாய் ஜெயசீலா அளித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்