search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓடும் ரெயிலில் பெண்ணை பிளேடால் வெட்டி தாலியை பறிக்க முயற்சி- 2 வாலிபர்கள் அட்டகாசம்
    X

    ஓடும் ரெயிலில் பெண்ணை பிளேடால் வெட்டி தாலியை பறிக்க முயற்சி- 2 வாலிபர்கள் அட்டகாசம்

    • திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் அருகே திடீரென 2 இளைஞர்கள் ஓடும் ரெயிலில் லல்லியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றனர்.
    • ஆத்திரமடைந்த இளைஞர்கள் லல்லியின் முகம் மற்றும் கையில் பிளேடால் வெட்டினார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் லல்லி (37) இவர் தினம் தோறும் சென்னை காசிமேடு பகுதிக்கு சென்று மீன் வாங்கி வந்து திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல் திருத்தணி பகுதியில் இருந்து புறநகர் ரெயில் மூலமாக சென்னை காசிமேடு பகுதிக்கு மீன் வாங்குவதற்காக லல்லி சென்று கொண்டு இருந்தார்.

    திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் அருகே திடீரென 2 இளைஞர்கள் ஓடும் ரெயிலில் லல்லியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக்கொண்ட லல்லி இளைஞர்களை தடுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் லல்லியின் முகம் மற்றும் கையில் பிளேடால் வெட்டினார்கள். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதனால் கை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த லல்லி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×