search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி துணை முதல்வர் ஆகனும்.. ஊருக்கே கறி விருந்து வைத்த தம்பதி - வீடியோ
    X

    உதயநிதி துணை முதல்வர் ஆகனும்.. ஊருக்கே கறி விருந்து வைத்த தம்பதி - வீடியோ

    • உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக்கிடுங்க.
    • கவுன்சிலர் தம்பதி கறிவிருந்த வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

    தமிழக விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் சிலரும் இதனை பொதுவெளியில் கருத்தாக கூறி வருகின்றனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆவார் என்ற வகையில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சிவகங்கையை சேர்ந்த கவுன்சிலர் தம்பதி ஊருக்கே கறிவிருந்து வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    சிவகங்கை மாவட்ட, சாலைகிராமத்தை சேர்ந்த செல்வி சாத்தையா என்ற கவுன்சிலர் கூறும்போது, "விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக வேண்டியும், ஊரில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் கிடாய் விருந்து வைத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்கிறோம்," என்றார்.

    மேலும், இந்த தம்பதியின் கறி விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


    Next Story
    ×