என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு
- பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
- 120 குடும்பங்களுக்கு வழங்கவேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் குட்டத்தில் நரிக்குறவர் சங்க நிர்வாகிகள் கணேசன், நம்பியார் ஆகியர் தலைமையில் நரிக்குறவர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
எறையூர் நரிக்குறவர் காலனியில் நாங்கள் கடந்த சுமார் 46 ஆண்டுகள்களுக்கு மேலாக உழுது பயிர்செய்து வந்த 353 ஏக்கர் நிலத்தை தற்பொழுது தாங்கள் சிப்காட் தருவதாக கூறியுள்ளீர்கள். எம்.பி. ஆ.ராசா 150 ஏக்கர் நிலத்தை 150 பேருக்கு தருவதாக கூறினார் ஆனால் இன்னும் வழங்க வில்லை, நீங்கள் சிப்காட்க்கு எந்த நிலத்தையும் தரகூடாது. அவற்றை ரத்து செய்ய வேண்டும். எங்களின் பணிவான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் வீதம் நிலமும், பட்டாவும் 120 குடும்பங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், வயலூர் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், வயலூர் கிராமத்தில் கழிவுநீர் வசதி இல்லை, சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. எனவே இக்கிராமத்தில் அடிப்படை வசதியான சாலைவசதி, கழிவுநீர்வடிக்கால் வசதி போன்றவைற்றை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்