search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ்சில் வந்த முதியவர் திடீர் சாவு
    X

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ்சில் வந்த முதியவர் திடீர் சாவு

    • குலதெய்வம் கோவிலுக்கு வந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 60) இன்று அவரது குடும்பத்திருடன் சேர்ந்து வேலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு பஸ்சில் அவர்கள் வந்தனர்.

    முருகன் குடும்பத்தினர் அனைவருக்கும் டிக்கெட் எடுத்தார். பஸ் வேலூர் வந்ததும் அவரது குடும்பத்தினர் முருகனை இறங்குமாறு கூறினர. அப்போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகனை பரிசோதனை செய்தனர். இதில் அவர் பஸ்சில் திடீரென இறந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து முருகன் உடலை அவரது உறவினர்கள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முருகன் இயற்கையாக இறந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×