search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருட்டு
    X

    திருட்டு

    • பெண்ணை அறையில் அடைத்து துணிகரம்
    • ேபாலீசுார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவரது மனைவி உமா மகேஸ்வரி வயது 50 நேற்று முன்தினம் இரவு வீட்டில் உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்த அறையை தாழிட்டு உள்ளனர்.மற்றொரு அறையில் இருந்த பெட்டியை திறந்து அதில் இருந்த ஒன்றரை சவரன் நகை 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.

    அப்போது சத்தம் கேட்டு உமாமகேஸ்வரி வந்தபோது அறை கதவின் வெளியே தாழிட்டு இருப்பதை கண்டு கண்டு சத்தமிட்டுள்ளார் இதனையடுத்து மர்மநபர்கள் தாளை திறந்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

    இந்த திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு அருகே வசிப்பவர் முதியவர் நக்கீரன் வயது 74 இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்னைக்கு சென்றுள்ளார் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அலங்கோலமாக இருந்துள்ளது பீரோவில் இருந்து 15 ஆயிரம் பணம் திருடி சென்றிருப்பது தெரியவந்தது

    இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    திருட்டு நடைபெற்ற வீட்டில் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×