என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
- குடியாத்தம் அடுத்த குட்லவாரிபல்லி கிராமத்தில் 108-வது ஆண்டாக நடந்தது
- 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீரிசெட்டிபல்லி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் 108-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150 க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன.
காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.இந்த காளை விடும் திருவிழாவிற்கு கே. ராமரத்தினம், ஏ.முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தாசில்தார், எஸ்.விஜயகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.40 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.30 ஆயிரம் உள்ளிட்ட மொத்தம் 40 காளைகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த காளை விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில் காய மடைந்தவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பலத்த காயமடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் குட்லவாரிபல்லி ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
குட்லவாரிபல்லி கிராமத்தில் காளை விடும் திருவிழாவில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதி களைச் சார்ந்தவர்களும், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்க ணக்கானோர் திரண்டு வந்து காளைகள் சீறிப்பாய்வதை கண்டு மகிழ்ந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்