search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    2 கல்லூரி மாணவிகள்- இளம்பெண் திடீர் மாயம்
    X

    2 கல்லூரி மாணவிகள்- இளம்பெண் திடீர் மாயம்

    • 2 கல்லூரி மாணவிகள்- இளம்பெண் திடீர் மாயமானார்கள்.
    • சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மாயமாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் ஒரே நாளில் 3 பெண்கள் மாயமானது தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. அதன் விவரம் வருமாறு.

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் மாலதி (வயது 20). இவர் சிவகாசியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதற்றமடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அவர் வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மாலதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி விஜயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் சீமா. இவரது மகள் மாரீஸ்வரி (20). இவர் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்த புகாரின்பே ரில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுந்தரபா ண்டியன் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

    தாயில்பட்டி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி முத்தாலம்மன் நகரை சேர்ந்தவர் மாரியப்பன்‌ இவரது மகள் முருக லட்சுமி (19). இவர் கோமாளிபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருக லட்சுமி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×