search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பெண்கள் தீக்குளித்து தற்கொலை
    X

    2 பெண்கள் தீக்குளித்து தற்கொலை

    • தீக்குளித்து 2 பெண்கள் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி செம்பொன் நெருஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (வயது35). இவர் கந்தசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு தூத்துக் குடியில் தங்கி அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திருவிழாவுக்காக பஞ்சவர்ணம் தனது கிராமத்துக்கு வந்திருந்தார். சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பஞ்சவர்ணம் வாழ்க்கையில் விரக்தி யடைந்து தீக்குளித்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் இறந்தார்.

    விருதுநகர் தண்டிய னேந்தல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அரியநாச்சி (வயது27). இவர் 2-வதாக அழகர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக அழகருக்கும், அரியநாச்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த அரியநாச்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(49), தொழிலாளி. இவரது மனைவி பொன்னுத்தாயி சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவருடன் சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த ஆனந்தன் விஷம் குடித்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த ஆனந்தன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×