search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கல்லூரி மாணவி உள்பட 5 பேர் மாயம்
    X

    கல்லூரி மாணவி உள்பட 5 பேர் மாயம்

    • கல்லூரி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (22). இவரது சகோதரி கவிதா (18). சம்பவத்தன்று வீட்டிலிருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லாததால் கருப்பசாமி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் திருமணமான ராமபாண்டி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி சம்பத்தன்று தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள பெரியபேராளியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பெத்தக்காள் (38). இவர் மனநிலை பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று மகளுடன் சென்ற பெத்தக்காள் மட்டும் திடீரென மாயமானார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் அருேக உள்ள ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பாலமுருகன் (18). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற பாலமுருகன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் ஐ.டிபி.டி.காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகள் ஆர்த்தி (20). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதில் மகள் மாயமானது தொடர்பாக திருமணமான தினேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×