என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கல்லூரி மாணவி- இளம்பெண் உள்பட 6 மாயம்
- கல்லூரி மாணவி, இளம்பெண் உள்பட 6 மாயமானார்கள்.
- வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரிய புளியம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பாபுகண்ணன் (வயது 32). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள நல்லுக்குறிச்சி காலனியை சேர்ந்தவர் பாலு (40). இவர் திண்டுக்கல்லில் உள்ள தேங்காய் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி (36) என்ற மனைவியும், திருமுருகன் (13) என்ற மகனும், அனிதா (10) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வி தனது மகன், மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலு வீரசோழன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
தேனி மாவட்டம் வாழை மரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் ராஷ்மி(17). இவர் விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.
இதற்காக விடுதியில் தங்கியிருந்தா ராஷ்மி சம்பவத்தன்று திடீரென்று மாயமானார். இதுகுறித்து அவரது தாய் மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பி பட்டியை சேர்ந்த கந்தம்மாள். இவரது மகன் லட்சுமணன்(14). சம்பவத்தன்று இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்